search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓரின சேர்க்கை"

    • கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர், கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27). இவர் சென்னையில் கால்டாக்சி டிரைவராக இருந்தார். நவம்பர் 11ம் தேதி தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்த அவர், நவம்பர் 13ம் தேதி சென்னைக்கு புறப்பட்டார். ஆனால் அவர் சென்னை சென்று சேரவில்லை.

    இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், கடைசியாக சோழபுரம் கிழக்குத் தெருவில் உள்ள சித்த மருத்துவர் கேசவமூர்த்தியின் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது. பின்னர் கேசவ மூர்த்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட கேசவ மூர்த்தி, அசோக் ராஜனுக்கு போதை மருந்துகள் கொடுத்து ஆசைக்கு இணங்க செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து அவரது வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

    பின்னர் அசோக் ராஜன் உடலை போலீசார் நேற்று முன் தினம் தோண்டி எடுத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    சித்த வைத்தியரான கேசவ மூர்த்தி ஆண்மை குறைபாடு போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார்.

    இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளால் தயாரித்து அவர்களுக்கு கொடுத்து குறிப்பிட்ட தொகையை பெற்று வந்தார்.

    பின்னர் தான் அசோக் ராஜனுக்கு வலை விரித்துள்ளார். சம்பவத்தன்று அவருக்கு சில மருந்துகளை கொடுத்துள்ளார்.

    ஒரு கட்டத்தில் உடல் வலி தாங்க முடியாமல் மூச்சடைப்பு ஏற்பட்டு அசோக் ராஜன் மயங்கினார்.

    இதனால் போலீசில் சிக்கி விடுவோம் என கருதிய கேசவ மூர்த்தி அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை ஆடு வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி தோலை உரித்து தனியாக புதைத்துள்ளார். விலா எலும்புகளை உடைத்து நொறுக்கி உள்ளார்.

    பின்னர் அந்த உடலை வீட்டின் கழிப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் புதைத்துவிட்டார்.

    இதற்கிடையே சித்த வைத்தியர் கேசவமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் அவர் கொடுத்த தகவல்படி அசோக் ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது உடலில் சில உள் உறுப்புகளை காணவில்லை.

    ஆகவே உள் உறுப்புகளை வெட்டி எடுத்து விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கேசவமூர்த்திக்கு உடல் உறுப்புகளை திருடிவிற்கும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆகவே திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கேசவ மூர்த்தியை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கேசவ மூர்த்தியின் டைரியில் 194 பெயர்கள் கொண்ட பட்டியல் இருந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் அரசியல் பிரமுகர்கள், அவர்கள் பாதிக்கு மேற்பட்டவர்கள் இளைஞர்கள்.

    எனவே டைரியில் இடம்பெற்று இருப்பவர்கள் கேசவமூர்த்தி இடம் சிகிச்சை பெற்றவர்களா? எதற்காக சிகிச்சை பெற்றார்கள் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    எனவே போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
    • எனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்

    குளச்சல் :

    இரணியல் அருகே கண்டன் விளை சடையமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 12-ம் வகுப்பு, 2-வது மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று எனது இளைய மகன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது குசவன்குழி பகுதியை சேர்ந்த தொழிலாளி ரவி, எனது மகனை வழிமறித்து மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அந்த பகுதியில் உள்ள காலி கட்டிடத்திற்கு அழைத்து சென் றார். பின்னர் எனது மகனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார்.

    இதையடுத்து எனது மகன் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். இந்த நிலையில் மீண்டும் எனது 2-வது மகன் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வந்தபோது வலுக்கட்டாயமாக ரவி அவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார். இதை பார்த்த எனது மூத்த மகன் ரவியை எச்சரித்தார். இதனால் எனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி யிருந்தார். இதுதொடர்பாக குளச்சல் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரவி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று மேலாளர் வழக்கம் போல கிரைண்டர் செயலி மூலம் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக நண்பர்களை தேடி வந்தார்.
    • மேலாளர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளார்.

    ஓரின சேர்க்கையாளரான இவர் கிரைண்டர் செயலியை தனது செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று மேலாளர் வழக்கம் போல கிரைண்டர் செயலி மூலம் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக நண்பர்களை தேடி வந்தார்.

    அப்போது அந்த செயலி மூலம் மேலாளருக்கு வடவள்ளி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ரிஸ்வான் என்ற ரிஷி (வயது21) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

    அந்த வாலிபர், மேலாளரிடம் நாம் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார். இதனை உண்மை என நம்பிய மேலாளர், ரிஸ்வான் அழைத்த வடவள்ளி முல்லை நகரில் உள்ள கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்கு அவரது மொபட்டில் சென்றார்.

    பின்னர் ரிஸ்வான், மேலாளரை ஜாலியாக இருக்கலாம் என அந்த கட்டிடத்தில் உள்ள 3-வது மாடிக்கு அழைத்து சென்றார்.

    3-வது மாடிக்கு சென்றதும் அங்கு மறைந்து இருந்த ரிஸ்வானின் நண்பர் தில்லை நகரை சேர்ந்த அஜய் என்ற மெய்யரசு (20) என்பவர் மேலாளரை உருட்டு கட்டையால் தாக்கினார்.

    பின்னர் அவரிடம் இருந்த மொபட்டின் சாவியை பறித்தனர். தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து, மேலாளாரை நிர்வாணமாக்கி, அதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து கொண்டனர்.

    மேலும் மேலாளரின் செல்போன் பறித்தனர். செல்போன் மூலம் மேலாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3ஆயிரம் பணத்தை ரிஸ்வானின் மனைவி அனுஸ்ரீ என்பவருக்கும், ரூ.30 ஆயிரம் பணத்தை அஜய் என்பவரின் தந்தையின் வங்கி கணக்கிற்கும் அனுப்பினர்.

    பின்னர் மேலாளரை வண்டியின் அர்.சி. புத்தகத்தை எடுத்து கொடுக்கும் படி கேட்டனர். இதனையடுத்து அவர்கள் மேலாளர் தங்கி இருக்கும் அறைக்கு அவரை மிரட்டி அழைத்து சென்றனர்.

    அறைக்கு கீழே ரிஸ்வான் மற்றும் அஜய் நின்று கொண்டு இருந்தனர். மேலாளர் மேலே சென்று வண்டியின் புத்தகத்தை எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார்.

    பின்னர் அவர் இதுகுறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது நண்பர்கள் வந்தனர். அவர்களுடன் மேலாளர் சென்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிஸ்வான், அஜய் ஆகியோர் அங்கு இருந்து மொபட்டில் தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து மேலாளர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தனியார் நிறுவன மேலாளரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்ததுடன், ரூ.33 பணம், செல்போன், மொபட் ஆகியவற்றை பறித்த ரிஸ்வான் அவரது மனைவி திருநங்கை அனுஸ்ரீ, அஜய் என்ற மெய்யரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல்.

    கம்பாலா:

    உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.

    அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

    இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

    ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

    அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார்.

    இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர்.

    மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, "உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது" என்றார்

    ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, "பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?" இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், "கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்" என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    • கல்லூரி மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது லெஸ்பியன் ஜோடியான பெண் என்ஜினீயரை பார்க்க வந்தார்.
    • கவுன்சிலிங்கின் போது, அந்த பெண் என்ஜினீயர் திடீரென அங்குள்ள கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஓரின சேர்க்கை கலாச்சாரத்துக்கு அங்கீகாரம் கொடுத்து இருந்தாலும் தமிழகத்தில் இந்த விவகாரம் பெரும்பாலும் இயற்கைக்கு மாறானதாகவே பார்க்கப்படுகிறது. மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட செல்போனும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளதை மறுக்க முடியாது.

    செல்போனில் வரும் ஆண், பெண், ஓரின சேர்க்கை வீடியோக்கள் மற்றும் அதற்கான நட்பை வளர்க்கும் செயலிகள் இளைய தலைமுறை மாணவ-மாணவிகளை பாதை மாற செய்து விடுவதை தருமபுரியில் நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் அவரது தோழியான பெண் என்ஜினீயருக்கும் ஏற்பட்ட ஓரின சேர்க்கை பழக்கம் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி உள்ளதே இதற்கு சாட்சி.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவி திடீரென மாயமாகி கோவையில் பெண் என்ஜினீயருடன் தங்கியிருந்தது தெரிந்து போலீசார் மீட்டு கோவையில் இருந்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். அங்கு போலீசார் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். கவுன்சிலிங்கின் போது, அந்த பெண் என்ஜினீயர் திடீரென அங்குள்ள கழிப்பறையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அந்த பெண் என்ஜினீயர் சேர்க்கப்பட்டார். அவர் எங்களை பிரிக்க மாட்டோம் என்று கூறி அழைத்து வந்த போலீசார் தற்போது இருவரையும் பிரிந்து செல்லுமாறு மிரட்டி எழுதி வாங்கிவிட்டனர். எனவேதான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறினார்.

    இந்நிலையில் அந்த கல்லூரி மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது லெஸ்பியன் ஜோடியான பெண் என்ஜினீயரை பார்க்க வந்தார். அப்போது அவர்கள் இருவரும் கட்டித்தழுவி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்டனர். இதையடுத்து அந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனிடையே அந்த மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டார். போலீசாரிடம் அவர் கூறுகையில் கடந்த 2 வருடங்களாக பழகிய நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக மாறி விட்டோம்.

    எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு குடும்பம் என்றால் என் பெண் தோழி மட்டும்தான். வாழ்ந்தால் இனி அவருடன் தான் வாழ்வேன். பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்று உறுதியாக கூறி விட்டார். இதனால் அனைத்து மகளிர் போலீசார் செய்வதறியாது அந்த மாணவியை தருமபுரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    இந்த மாணவிகள் விஷயத்தில் அவர்களை விட அவர்களின் பெற்றோருக்குதான் பெரும் பங்கு உள்ளது. மகனோ, மகளோ செல்போனில் நீண்ட நேரம் யாருடன் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்பதை கவனித்து அவர்களின் நடவடிக்கையில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால் அதை உடனே கண்டித்து திருத்த வேண்டிய கடமை அவர்களுக்கும் உள்ளது. இல்லையேல் வடமாநிலங்களில் அடிக்கடி நடக்கும் இது போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் தமிழகத்திலும் தொடரும் அபாயம் உள்ளது.

    • சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர்.
    • மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது.

    பண்ருட்டி, ஆக.25-

    கடலூர் மாவட்டம்பண்ருட்டி அருகே மாளிகை மேடு புது காலனியைசேர்ந்தவர் திலீப் குமார் (வயது 57)இவர் பண்ருட்டி அருகே வல்லத்தில் உள்ள ரேசன் கடைவிற்பனையாளராக பணியாற்றிவந்தார்.விடுமுறை நாளான கடந்த 23-ந் தேதிவீட்டில்இருந்துள்ளார். அன்று இரவு7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில்சென்றவர் வீடு திரும்பாததால் வீட்டில் இருந்தவர்கள்அக்கம்பக்கம்தேடினர். எங்கும்கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார்கொடுத்தனர். இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள சுந்தர்ராஜன்என்பவரது கரும்புதோட்டத்தில் திலீப் குமார் பிணமாக கிடப்பதைகண்டனர். உடனே பண்ருட்டி போலீசார் அவரதுஉடலை கைப்பற்றிபண்ருட்டி அரசு மருத்துவமனைக்குபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாககிடந்த திலிப் குமார்மீது மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.சினிமா பட பாணியில்மிளகாய் பொடி தூவிஇவரை எதற்காக யார்?கொலை செய்தனர்என்பதுகுறித்து போலீஸார்விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு அவரது வீட்டுக்குள் நுழைந்தது. பின்னர் அதே இடத்தில் சுற்றி வந்தது. இதனால் இந்தகொலையில் அவரது உறவினர்யாருக்காவது தொடர்பு இருக்குமா?வேறு ஏதாவது தொடர்புகளால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணைசெய்து வந்தனர். அந்தப் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவைஆராய்ந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் அரவிந்த் (24) என்பவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அரவிந்த் கூறினார். இதானல் போலீசாருக்க சந்தேகம் வலுத்தது. பின்னர் தனி இடத்தில் வைத்துவிசாரித்தனர்.விசாரணையில் ரேசன் கடை ஊழியர்திலிப் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். தனக்கு அடுத்த மாதம்திருமணம் நடக்க உள்ளதாகவும் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் பணத்திற்காக திலீப் குமாரை கொலை செய்ய முடிவு செய்தேன். திலீப் குமார் ஓரின சேர்க்கை பழக்கம் உள்ளவர் . அவரோடு நான் பலமுறை ஓரினசேர்க்கை ஈடுபட்டுள்ளேன். அவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளேன்.

    திருமண செலவுக்கு பணம் கேட்டேன். இல்லை என்று சொல்லிவிட்டார். அவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன். அவரிடம் இருந்து நகைகளை பறித்துக் கொண்டுபோலீஸ் நாய் மோப்பம் பிடிக்காமல் இருக்க அவரது உடம்பில் மிளகாய் பொடி தூவினேன். பின்னர் அவரது குடும்பத்தினருடன் அவரை தேடுவது போல நடித்தேன் போலீசில் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து அவனை கைதுசெய்து கோர்ட்டில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவனிடமிருந்து 2 பவுன் செயின், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் ,கொலை செய்த போது அவன் உடுத்தி இருந்த ரத்தக றைபடிந்த அவனதுஉடைகளை போலீசார் பறிமுதல்செய்தனர். ரேசன் கடை ஊழியர் கொலை வழக்கில் துப்பு துலக்கிய பண்ருட்டி போலீஸ் டிஎஸ்பி சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் பாராட்டு தெரிவித்தார்

    • போதையில் டெம்போ டிரைவர் என்னிடம் ஓரின சேர்க்கைக்காக தொந்தரவு செய்ததாக தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    • ஓரின சேர்க்கைக்காக தொந்தரவு செய்ததால் கல்லால் தாக்கி கொன்றதாக தொழிலாளி கூறினார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஊமகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற செந்தில்குமார்(வயது 43).டெம்போ டிரைவர். இவருக்கு சங்கீதா (30) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்தனர். சேட்டுக்கு செம்மாண்டப்பட்டி ஊராட்சி காளியம்மன் கோவில் பகுதியில் வீடு உள்ளது. இங்கு இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலை அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செந்தில்குமார் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு ஓமலூர் பொறுப்பு டி.எஸ்.பி. இளமுருகன், ஓமலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் தார் சாலை வரை சென்று ஒரு பிளாட் ரோட்டில் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று நின்று கொண்டது. மேலும் தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அக்கம்பக்கத்து வீட்டினர் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் செந்தில்குமார் குடிப்பழக்கம், சீட்டாடும் பழக்கம் உள்ளவர் எனவும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். கொலையாளியை கைது செய்ய ஓமலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்போன் சிக்னல் உள்ளிட்டவைகளை கொண்டு விசாரணை நடத்தியதில் கொலை நடந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்பவர் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமாரும், கிருபாகரனும் நண்பர்கள் என்றும், சம்பவத்தன்று நள்ளிரவு வரை மது குடித்துவிட்டு இதில் ஏற்பட்ட தகராறில் கல்லை எடுத்து தலையில் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து கிருபாகரனை போலீசார் கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கைதான கிருபாகரன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று நாங்கள் இருவரும் மது வாங்கி நள்ளிரவு வரை குடித்தோம். போதை தலைக்கு ஏறிய பின்பு செந்தில்குமார் என்னிடம் ஓரின சேர்க்கைக்காக தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்து கல்லால் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    புனே நகரில் ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை கத்தியால் குத்திய நபரை மகாராஷ்டிரா மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
    மும்பை :

    மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ஓரின சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த 23 வயது மதிக்கத்தக்க வாலிபரை 46 வயது மதிக்கத்தக்க நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த அம்மாநில போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து புனே கதக் நகர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ காயம் பட்ட வாலிபருக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் கடந்து இரண்டு வருடங்களாக ஓரின சேர்க்கை உறவு இருந்துள்ளது. இந்நிலையில், புனேவில் உள்ள வாலிபரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் அந்த நபர் வந்துள்ளார். பின்னர் அவர்கள் அன்று இரவு ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, மறுநாள் காலையிலும் அந்த நபர் வாலிபரை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு உடன்படாமல் வாலிபர் மறுப்பு தெரிவித்த காரணத்தினால் அவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது.

    இதில், ஆத்திரமடைந்த நபர் அவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த வாலிபர் உதவி கேட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர் என அவர் தெரிவித்தார்.

    ஓரின சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறு கத்திக்குத்து வரை சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய அவர்கள் இருவரது பெயரையும் போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
    ×